ஆர்சிபிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.
தில்லி கேபிடஸ் அணி 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதிலாவது வெற்றி பெருமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். டாஸ் வென்ற தில்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார்.
பெங்களூரு சின்னசாமி மைதனாத்தில் விராட் கோலி 2000 ஐபிஎல் ரன்களை எடுத்துள்ளார். ஒரே மைதானத்தில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
தில்லிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார் (975). ரோஹித் (977) முதலிடத்தில் உள்ளார். 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்த சாதனையை படைக்க தவறிவிட்டார்.
34 பந்தில் 50 ரன்கள். 6 பவுண்டரிகள், 1 சிக்ஸர் இதில் அடங்கும்.