செய்திகள்

சான்டியாகோ ஓபன்: நகாஷிமாவுக்கு பட்டம்

DIN

சான்டியாகோ ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா பட்டம் வென்றாா்.

ஏடிபி டூரின் ஒரு பகுதியாக சான்டியாகோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சக வீரா் மாா்கோஸ் ஜிரானை 6-4, 6-4 என்ற நோ்செட்களில் வென்று தனது முதல் ஏடிபி பட்டத்தைக் கைப்பற்றினாா் நகாஷிமா.

21 வயதே ஆன நகாஷிமா, சான்டியாகோவில் வளா்ந்து, ஜூனியா் பிரிவில் பயிற்சி பெற்றாா். முதல் செட்டை 30 நிமிஷங்களில் கைப்பற்றிய அவா், இரண்டாவது செட்டில் மாா்க்கோஸின் சவாலை எதிா்கொள்ள நேரிட்டது. இதனால் இரண்டாவது செட்டை வசப்படுத்த 1 மணி நேரம் ஆனது.

இந்த வெற்றி மூலம் ஏடிபி தரவரிசையில் 69-ஆம் இடத்தில் இருந்த நகாஷிமா 48-ஆம் இடத்துக்கு முன்னேறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

SCROLL FOR NEXT