செய்திகள்

மகளிர் ஆசியக் கோப்பை: இலங்கையை எளிதாக வீழ்த்திய இந்திய அணி!

DIN

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. 

டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஷெஃபாலி வர்மா வர்மா 10 ரன்களிலும் மந்தனா 6 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் - ஜெமிமா ரோட்ரிகஸ் அபாரமான கூட்டணியை அமைத்தார்கள். இருவரும் 71 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார்கள். ஜெமிமா 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ஹர்மன்ப்ரீத் 33 ரன்களிலும் ஜெமிமா 76 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. இலங்கையின் ஒஷாதி உதேசிகா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்பிறகு பேட்டிங் செய்த இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. இதனால் 18.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை அணி, 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஹேமலதா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக ஜெமிமா தேர்வானார். 

ஆசியக் கோப்பை டி20 போட்டியில் 7 நாடுகள் போட்டியிடுகின்றன. இந்திய அணி அக்டோபர் 3 அன்று மலேசியாவையும் அக்டோபர் 4 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தையும் அக்டோபர் 7 அன்று பாகிஸ்தானையும் அக்டோபர் 8 அன்று வங்கதேசத்தையும் அக்டோபர் 10 அன்று தாய்லாந்தையும் எதிர்கொள்கிறது. அக்டோபர் 13 அன்று அரையிதிச் சுற்றும் அக்டோபர் 15 அன்று இறுதிச்சுற்றும் நடைபெறவுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT