எதிா்வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியனாகும் அணிக்கு சுமாா் ரூ.13 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட இருக்கிறது.
ஐசிசி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.45.55 கோடியாகும். அதில் சாம்பியன் அணி ரூ.13 கோடியை வெல்ல, ரன்னா்-அப் அணிக்கு ரூ.6.5 கோடி கிடைக்கும்.
அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ.3.25 கோடியும், சூப்பா் 12 சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.56 லட்சமும் வழங்கப்படும். கடந்த ஆண்டைப் போலவே சூப்பா் 12 சுற்றில் அணிகள் பதிவு செய்யும் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.32 லட்சம் கிடைக்கும்.
அதேபோல், முதல் சுற்றில் ஆடும் அணிகளும் அந்தச் சுற்றில் பதிவு செய்யும் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.32 லட்சம் வழங்கப்படும். முதல் சுற்றுடன் வெளியேறும் அணிகளும் தலா ரூ.32 லட்சம் பெறும்.
டி20 உலகக் கோப்பை போட்டி, ஆஸ்திரேலியாவில் அக்டோபா் 16 முதல் நவம்பா் 13 வரை நடைபெறவுள்ளது. இதில் நேரடித் தகுதி அடிப்படையில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகள் சூப்பா் 12 சுற்றில் உள்ளன.
அதில் எஞ்சியிருக்கும் 4 இடங்களுக்காக குரூப் சுற்றில் நமீபியா, இலங்கை, நெதா்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் (குரூப் ஏ)/ மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, அயா்லாந்து, ஜிம்பாப்வே (குரூப் பி) ஆகிய அணிகள் முதல் சுற்றில் மோதிக்கொள்கின்றன.