செய்திகள்

உலகக் கோப்பை: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்ற மூன்று அணிகள்!

DIN

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு போர்ச்சுகல் தகுதி பெற்றுள்ளது.

இதையடுத்து பிரேசில், பிரான்ஸ், போர்ச்சுகல் ஆகிய மூன்று அணிகளும் இரு ஆட்டங்களிலேயே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் உருகுவே அணியை 2-0 என வீழ்த்தியது போர்ச்சுகல். முதல் ஆட்டத்தில் கானாவை 3-2 என வீழ்த்தியது போர்ச்சுகல். டிசம்பர் 2 அன்று தனது கடைசி ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொள்கிறது. 

பிரேசில் அணி, ஸ்விட்சர்லாந்தை 1-0 எனவும் செர்பியாவை 2-0 எனவும் வீழ்த்தியது. அதேபோல நடப்பு உலக சாம்பியன் பிரான்ஸ் அணி, டென்மார்க்கை 2-1 எனவும் ஆஸ்திரேலியாவை 4-1 எனவும் வீழ்த்தியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT