செய்திகள்

இந்தியத் தேர்வுக்குழுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பிரபல முன்னாள் வீரர்கள்

DIN

சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என இரண்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டது பிசிசிஐ. இதனால் தற்போது தேர்வுக்குழுத் தலைவராக உள்ள சேதன் சர்மா மற்றும் அவருடைய குழுவினரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. 

தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 7 டெஸ்டுகள் அல்லது 30 முதல்தர ஆட்டங்கள் அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல்தர ஆட்டங்களில் விளையாடியிருக்க வேண்டும், குறைந்தபட்சம் 5 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று இதற்கான விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நவம்பர் 28-க்குள் அனுப்பப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தேர்வுக்குழு தலைவர் அல்லது உறுப்பினராக முன்னாள் வீரர்களான நயன் மோங்கியா, மனிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ், அஜய் ராத்ரா, ஹேமங் பதானி போன்றோர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்வுக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய புதிய குழுவை நியமிக்கவுள்ளது பிசிசிஐ. அவர்களின் பரிந்துரையின் பேரில் தேர்வாகும் உறுப்பினர்களை பிசிசிஐ அறிவிக்கும். ஜனவரியில் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணியைப் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்.

தேர்வுக்குழுவுக்கு விண்ணப்பித்த முன்னாள் வீரர்களில் ஷிவ் சுந்தர் தாஸ் தேர்வாக வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது. தற்போது பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார். நேஷனல் கிரிக்கெட் அகாதெமியின் பயிற்சியாளர்களில் ஒருவராகவும் இந்திய மகளிர் கிரிக்கெட்டிலும் அவர் பணியாற்றியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஹேமங் பதானியும் விண்ணப்பித்துள்ளார் என அறியப்படுகிறது. தற்போது சன்ரைசர்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக அவர் உள்ளார். டிஎன்பிஎல் போட்டியில் மூன்று முறை பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். விண்ணப்பித்த வீரர்களின் மோங்கியா மூத்த வீரராக இருப்பதால் அவர் தேர்வாகவும் வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT