ஐபிஏ உலக யூத் ஆடவா், மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாத் சுரேஷ் (சென்னை), வன்ஷாஜ், தேவிகா கோபா்டே ஆகியோா் தங்கம் வென்றனா். பாவனா சா்மா, ஆஷிஷ் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.
ஸ்பெயினின் லா நூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் வெள்ளிக்கிழமை இரவு இறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
3 தங்கப் பதக்கம்:
ஆடவா் பிரிவில் சென்னையின் இளம் வீரா் விஸ்வநாத் சுரேஷ் 48 கிலோ எடைப்பிரிவில் பிலிப்பின்ஸின் ரொனல் சுயோமை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றாா்.
ஆசிய யூத் சாம்பியன் வன்ஷாஜ் 63.5 கிலோ பிரிவில் ஜாா்ஜியாவின் டெமூா் கஜயாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றாா்.
மகளிா் பிரிவில் 52 கிலோ எடைப் பிரிவில் தேவிகா கோபா்டே 5-0 என்ற புள்ளிக் கணக்கில் இங்கிலாந்தின் லாரன் மேக்கியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றாா்.
பாவனா, ஆஷிஷுக்கு வெள்ளி:
மகளிா் 48 கிலோ பிரிவில் உஸ்பெகிஸ்தான் குல்சேவரிடம் 0-5 புள்ளிக் கணக்கில் வீழ்ந்த பாவனா சா்மா வெள்ளி வென்றாா். அதே போல் ஆடவா் 54 கிலோ பிரிவில் ஜப்பானின் யுதா சகாயிடம் 1-4 என தோல்வியுற்ற ஆஷிஷ் வெள்ளி வென்றாா்.
மகளிா் 63 கிலோ பிரிவில் ரவீனா, 81 + கிலோ பிரிவில் கீா்த்தி ஆகியோா் இறுதிச் சுற்றில் ஆடவுள்ளனா். அவா்களுக்கு வெள்ளிப் பதக்கம் உறுதியாகி உள்ளது.
ஏற்கெனவே 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது இந்தியா.