செய்திகள்

கேம்ரூன் க்ரீன் ஐபிஎல்-லில் விளையாடுவதைத் தடுக்க மாட்டேன்: ஆஸி. கேப்டன்

DIN

ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீன் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதைத் தடுக்க மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி. ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கான ஏலம் டிசம்பர் 23 அன்று நடைபெறவுள்ளது. 2023 ஐபிஎல் போட்டியில் பங்குபெறப் போவதில்லை என ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் சமீபத்தில் அறிவித்தார். 

இந்நிலையில் ஆஸி. ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீன் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது பற்றி கம்மின்ஸ் கூறியதாவது:

ஐபிஎல் ஏலத்தில் கிரீன் பங்குபெறுவார் என நினைக்கிறேன். ஏலம் நடக்க இன்னும் கொஞ்ச நாள்கள் இருக்கின்றன. சுயநலம் கொண்ட கேப்டனாக, கிரீன் தன்னுடைய ஆற்றலையெல்லாம் ஆஸ்திரேலிய அணிக்காகச் செலவிட வேண்டும் என்றே எண்ணுவேன். ஆனால் அதுபோன்ற ஒரு வாய்ப்பு வரும்போது அதை வேண்டாம் எனச் சொல்லிவிடு என அவரிடம் நான் எப்படிக் கூற முடியும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி அதிமுக வேட்பாளா் மீனவா் மக்களிடம் வாக்கு சேகரிப்பு

‘வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் விடுமுறை அளிக்காவிடில் நடவடிக்கை’

தோ்தல் பணி ஆசிரியா்களுக்கு 3ஆம் கட்ட பயிற்சி வகுப்பு

ஏப்.19-இல் உழவா் சந்தைகளுக்கு விடுமுறை

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் 79 நாள்களுக்குப் பின் மின்உற்பத்தி

SCROLL FOR NEXT