இலங்கைக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் 20 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி.
இந்திய மகளிர் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஜூன் 23 அன்று டி20 தொடர் தொடங்கியது. அதன்பிறகு நடைபெறும் ஒருநாள் தொடர், ஜூலை 7 அன்று முடிவடைகிறது. முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது டி20 ஆட்டத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டி20 தொடரைக் கைப்பற்றியது.
டம்புல்லாவில் இன்று நடைபெற்று வரும் 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்தார். ரோட்ரிகஸ் 33, மந்தனா 22 ரன்கள் எடுத்தார்கள்.