செய்திகள்

விஜய் மல்லையாவுடன் கிறிஸ் கெயில் சந்திப்பு

DIN

பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில், தொழிலதிபர் விஜய் மல்லையாவைச் சந்தித்துள்ளார். 

கிங் ஃபிஷா் விமான நிறுவனத்தின் உரிமையாளரான மல்லையா, வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் கடந்த 2016-இல் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றாா். தலைமறைவு நிதி மோசடியாளராக அறிவிக்கப்பட்ட அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டுள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டனின் ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறை 3 ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது. அவா் அந்நாட்டில் ஜாமீனில் உள்ளாா்.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான கிறிஸ் கெயிலுடனான சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார் விஜய் மல்லையா. ஆர்சிபி அணியை 2008-ல் தொடங்கிய மல்லையா, கெயில் சந்திப்பு குறித்து கூறியதாவது: கெயிலைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. ஆர்சிபி அணிக்காக அவரை நான் தேர்வு செய்ததிலிருந்து அருமையான நட்பு தொடர்கிறது. ஐபிஎல் போட்டி வரலாற்றில் அவரைத் தேர்வு செய்தது மிகச்சிறந்ததாகும் என்றார். 

2011-ல் ஆர்சிபி அணியில் இணைந்த கெயில், 2017 வரை அந்த அணிக்காக விளையாடினார். ஆர்சிபி அணிக்காக விளையாடிய 91 ஆட்டங்களில் 5 சதங்கள், 21 அரை சதங்கள் உள்பட 3420 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் -  154.40. ஆர்சிபி அணிக்காக விளையாடியபோது ஓர் ஆட்டத்தில் 175 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

இஸ்ரோ ராக்கெட்டுகளை கொண்டுச் செல்ல பயன்படும் அதிநவீன வாகனம் : அரக்கோணத்தில் இருந்து மகேந்திரகிரிக்கு அனுப்பப்பட்டது

சங்கரன்கோவில் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.03 லட்சம் பறிமுதல்

கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனையை தீவிரப்படுத்த ஆட்சியா் உத்தரவு

SCROLL FOR NEXT