செய்திகள்

மே.இ. தீவுகள் ஒருநாள் தொடர்: புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடருக்குப் பிறகு இங்கிலாந்தில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. இங்கிலாந்துச் சுற்றுப்பயணம் ஜூலை 17 அன்று நிறைவடைகிறது. இதன்பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. மே.இ. தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜூலை 22 அன்று தொடங்கி ஜூலை 27 அன்று நிறைவடைகிறது. 

ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெயிக்வாட், ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன், சிராஜ், அர்ஷ்தீப் சிங் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள். துணை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ரிஷப் பந்த், பாண்டியா, ஷமி ஆகியோருக்கு இத்தொடரில் விளையாடுவதிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ஒருநாள் அணி

ஷிகர் தவன் (கேப்டன்), ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்குர், சஹால், அக்‌ஷர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT