வங்காள தேசம் மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி தோல்வியைத் தழுவியது. முடிவு தெரிந்த பிறகு ஆட்டத்தைப் பார்க்க வேண்டுமா என வங்கதேச முன்னாள் டெஸ்ட் கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
வங்காள தேசம் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் மே.இ. தீவுகள் அணி வெற்றிப் பெற்றது. இதற்கு முன்பும் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சச்சின்,அசாரூதின் சாதனையை சமன்செய்த ஜடேஜா,ரிஷப் பந்த்
இந்நிலையில், வங்கதேசத்தின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ரஹிபுல் ஹாசன் கூறியதாவது:
தமிம் இக்பால் , ஷகிப் அல் ஹாசன் ஆகியோர் விளையாடி அவுட் ஆகும் வித்ததைப் பார்த்தால் இவர்கள் எப்படி டெஸ்டில் 5000 ரன்களை எடுத்தனர் என்று அதிசயிக்க தோன்றுகிறது.
எங்களது நாட்டில் பெரிதாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் இல்லை. மற்றைய நாடுகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள். காரணம் என்னவெனில், ஆட்டத்தைப் பார்க்கும் முன்னரே மக்களுக்கு ஆட்டத்தின் முடிவு தெரிந்து விடுகிறது. எப்படியும் வங்கதேசம் தோற்கப் போகிறது என தெரிந்து விடுகிறது. இந்த மோசமான கிரிக்கெட்டைப் பார்க்க எப்படி வருவார்கள்? நீங்கள் ஒழுங்காக விளையாடினால் தொடர்ந்து வெற்றிப் பெற்றால் ரசிகர்கள் தானாக வருவார்கள்.
இதையும் படிக்க: 17 வருட தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்