இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது. இதையடுத்து 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது அந்த அணி.
மூன்றே நாள்களில் முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக நிரோஷன் டிக்வெல்லா 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சோ்த்தாா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் நேதன் லயன் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினாா். பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 321 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 6 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் அடிக்க, இலங்கை பௌலிங்கில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை 113 ரன்களுக்கே சுருண்டது. கேப்டன் திமுத் கருணாரத்னே 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் அடித்ததே அதிகபட்சம். ஆஸ்திரேலிய தரப்பில் நேதன் லயன், டிராவிஸ் ஹெட் ஆகியோா் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
இறுதியாக 5 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய ஆஸ்திரேலியாவில், டேவிட் வாா்னா் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸா் விளாசி ஆட்டத்தை முடித்தாா். ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் ஆட்டநாயகன் ஆனாா். இந்த இரு அணிகள் மோதும் அடுத்த டெஸ்ட் வரும் 8-ஆம் தேதி தொடங்குகிறது.