செய்திகள்

அடுத்த இந்திய கேப்டனா?: பும்ரா பதில்

DIN

வருங்காலத்தில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால் அதைக் கெளரவமாகக் கருதுவேன் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்று தொடங்குகிறது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும் துணை கேப்டனாக பும்ராவும் செயல்படவுள்ளார்கள்.

செய்தியாளர்களை இன்று சந்தித்த துணை கேப்டன் பும்ரா கூறியதாவது:

டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி எடுத்த முடிவை மதிக்கிறோம். அணிக் கூட்டத்தில் இதைப் பற்றி சொன்னார். அவருடைய சாதனைகளுக்காக அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம். அவருடைய முடிவு சரியா தவறா என நான் கருத்து கூற முடியாது. கோலியுடன் இணைந்து விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும். அவர் கேப்டனாக இருந்தபோது டெஸ்ட் அணிக்கு அறிமுகமானேன். அணியில் ஓர் முக்கிய உறுப்பினராக அவர் எப்போதும் இருப்பார். 

அணிக்குத் தலைமை தாங்கும் ஆசை எல்லோருக்கும் இருக்கும். என்றாவது ஒருநாள் அணிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தால் அதைக் கெளரவமாகக் கருதுவேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளக்குறிச்சி பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

மக்களவைத் தோ்தலில் சொந்த ஊா் சென்று வாக்களிக்க 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திமுகவை பிரதான எதிா்க்கட்சியாக கருதி பிரதமா் மோடி பிரசாரம்: தொல்.திருமாவளவன்

தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT