செய்திகள்

உலகக் கோப்பை: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள்!

DIN

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பங்கேற்கவுள்ள அணிகள் முடிவாகியுள்ளன.

நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் போர்ச்சுகலை தென் கொரியா 2-1 எனவும் கானாவை உருகுவே 2-0 எனவும் ஸ்விட்சர்லாந்து செர்பியாவை 3-2 எனவும் கேமரூன் பிரேஸிலை 1-0 எனவும் வீழ்த்தின. இதையடுத்து நேற்றைய ஆட்டங்களின் முடிவில் ஸ்விட்சர்லாந்தும் தென் கொரியாவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. கூடுதலாக ஒரு கோல் அடித்திருந்தால் உருகுவே தகுதி பெற்றிருக்கும். இதனால் வெற்றி பெற்றும் அந்த அணியால் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

பிரேஸிலும் போர்ச்சுகலும் தங்களுடைய பிரிவில் முதலிடத்தைப் பிடித்தாலும் கடைசி ஆட்டத்தில் தோற்றுள்ளன. பிரேஸிலைத் தோற்கடித்தாலும் கேமரூன் அணியால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. 

இந்நிலையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட வேண்டிய 16 அணிகளும் முடிவு செய்யப்பட்டுள்ளன. 

பிரான்ஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து, போலந்து, ஸ்பெயின், குரோசியா, போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, மொராக்கோ, செனகல், அர்ஜென்டீனா, பிரேஸில், அமெரிக்கா.

ஐரோப்பா (8): பிரான்ஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து, போலந்து, ஸ்பெயின், குரோசியா, போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து
ஆசியா (3): ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா
ஆப்பிரிக்கா (2): மொராக்கோ, செனகல்
தென் அமெரிக்கா (2): அர்ஜென்டீனா, பிரேஸில்
வடக்கு & மத்திய அமெரிக்கா: அமெரிக்கா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT