செய்திகள்

உலகக் கோப்பை: வெளியேறிய இரு பெரிய அணிகள்!

DIN


கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளான பெல்ஜியமும் ஜெர்மனியும் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியுள்ளன.

நேற்றைய ஆட்டங்களில் கனடாவை மொராக்கோ 2-1 எனவும் ஸ்பெயினை ஜப்பான் 2-1 எனவும் கோஸ்டா ரிக்காவை ஜெர்மனி 4-2 எனவும் வீழ்த்தின. குரோஷியா - பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது. 

குரூப் ஈ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த ஜப்பானும் ஸ்பெயினும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்தன. 2014-ல் உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனியும் கோஸ்டா ரிக்காவும் வெளியேறின. நேற்றைய ஆட்டத்தில் வெற்றி கிடைத்தாலும் ஜெர்மனியால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. தோற்றாலும் 2-ம் இடம் பிடித்ததால் ஸ்பெயின் தகுதி பெற்றது.  ஜெர்மனி அணியும் ஸ்பெயின் போல 4 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் ஸ்பெயின் தகுதியடைந்தது. 

குரூப் எஃப் பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த மொராக்கோவும் குரோஷியாவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன. பெல்ஜியம், கனடா அணிகள் தகுதி பெறவில்லை. தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி நேற்று குரோஷியாவை வீழ்த்த முடியாத காரணத்தால் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. 

4 முறை உலகக் கோப்பைகளை வென்ற ஜெர்மனி அணியும் நெ.2 அணியான பெல்ஜியமும் ஒரே நாளில் போட்டியை விட்டு வெளியேறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

SCROLL FOR NEXT