கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் நேற்றைய ஆட்டங்களில் ஆஸ்திரேலியா டென்மார்க்கை 1-0 என வீழ்த்தியது. நடப்பு சாம்பியன் பிரான்ஸை 1-0 என வீழ்த்தி அதிர்ச்சியளித்தது துனிசியா. அடுத்த இரு ஆட்டங்களில் ஆர்ஜென்டீனா போலந்தை 2-0 எனவும் மெக்ஸிகோ சவூதி அரேபியாவை 2-1 எனவும் வீழ்த்தின. போலந்தும் மெக்ஸிகோவும் தலா 4 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் போலந்து அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனால் நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் மெக்ஸிகோ அணியால் அடுத்தச் சுற்றுக்குச் செல்ல முடியவில்லை.
இதையடுத்து ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, போலந்து ஆகிய மூன்று அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குப் புதிதாகத் தகுதியடைந்துள்ளன.
பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல், நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, போலந்து என இதுவரை 10 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன. இன்னும் 6 அணிகள் அடுத்த ஆட்டங்களின் முடிவில் தேர்வு செய்யப்படவுள்ளன.