செய்திகள்

பாரா துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 பதக்கங்கள்

DIN

தென் கொரியாவில் நடைபெறும் பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் நாளில் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்றது.

இதில் கலப்பு பி3 25 மீட்டா் பிஸ்டல் எஸ்ஹெச்1 பிரிவில் இந்தியாவின் ராகுல் ஜாக்கா் 20 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, அதே பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா அகா்வால் 14 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றாா். இதனிடையே, மகளிா் ஆா்2 10 மீட்டா் ஏா் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் இந்தியாவின் அவனி லெகாரா 247.8 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

கடந்த 18-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இப்போட்டியில் இந்தியத் தரப்பிலிருந்து 14 போ் கொண்ட குழு பங்கேற்றிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT