செய்திகள்

இந்தியாவில் நடைபெறவுள்ள அடுத்த பெரிய செஸ் போட்டி

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டி வெற்றிகரமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதற்கடுத்ததாக இன்னொரு பெரிய செஸ் போட்டியை நடத்தவுள்ளது இந்தியா.

கொல்கத்தாவில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 4 வரை டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டி நடைபெறவுள்ளது (டிசம்பர் 2 ஓய்வு நாள்). இந்தமுறை முதல்முறையாக பெண்களுக்கென தனியே போட்டி நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவு, மகளிர் என இரண்டுக்கும் சம அளவில் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரேபிட், பிளிட்ஸ் என இரு விதமாக இப்போட்டி நடைபெறவுள்ளது. மகளிர் பிரிவில் முன்னணி 5 சர்வதேசப் பெண் கிராண்ட்மாஸ்டர்களும் 5 முன்னணி இந்திய வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டியில் ரேபிட் பிரிவில் இந்தியாவின் அர்ஜுனும் பிளிட்ஸ் பிரிவில் லெவோன் அரோனியனும் வென்றார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT