செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்று, தான் நினைத்ததைச் சாதித்து விட்டதாக நிறைமாத கா்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடிய ஹரிகா தெரிவித்துள்ளார்.
சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. தமிழக அரசு, சா்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) சாா்பில் ரூ.100 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம் ஃபோா் பாயிண்ட் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கியது. ஓபன் பிரிவில் 187, மகளிா் பிரிவில் 162 நாடுகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
ஓபன் பிரிவில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்ற இந்திய பி அணி வெண்கலம் வென்றது. மகளிர் பிரிவில் நிறைமாத கா்ப்பிணி ஹரிகா, கொனேரு ஹம்பி, ஆா். வைஷாலி, பக்தி குல்கா்னி, தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்ற இந்திய ஏ அணி வெண்கலம் வென்றது.
இந்நிலையில் வெண்கலம் வென்றது பற்றி செஸ் வீராங்கனை ஹரிகா கூறியதாவது:
13 வயதில் இந்திய மகளிர் அணிக்காக அறிமுகமானதிலிருந்து 18 வருடங்களாகி விட்டன. இதுவரை 9 ஒலிம்பியாட்களில் விளையாடியுள்ளேன். இந்திய அணியினருடன் பதக்க மேடையில் நிற்க வேண்டும் என்பது கனவாக இருந்து. அது இந்தமுறை நிறைவேறியுள்ளது.
9 மாத கர்ப்பிணியாக இருந்து சாதித்ததால் இது உணர்வுபூர்வமாக உள்ளது. ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது என்பதால் நல்ல உடல்நலத்துடன் இருந்தால் அப்போட்டியில் விளையாடலாம் என என் மருத்துவர் சொன்னதிலிருந்து ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று பதக்கம் பெறவேண்டும் எனத் தீவிரமாகச் செயல்பட்டேன். இதைச் சாத்தியமாக்குவதற்காகவே என்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தேன். வளைகாப்பு நிகழ்ச்சி இல்லை, பார்ட்டிகள் இல்லை, கொண்டாட்டங்கள் இல்லை... பதக்கம் வென்ற பிறகே இவை அனைத்தும் என முடிவெடுத்தேன். நான் நன்றாக விளையாட வேண்டும் என தினமும் உழைத்தேன். கடந்த சில மாதங்களாக இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்து, அதைச் சாதித்துள்ளேன். இந்திய மகளிர் அணி முதல்முறையாக ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது என்றார்.
பிறந்த நாள்: தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தா
இந்திய செஸ் அணிகளுக்குப் பரிசுத்தொகையை வழங்கிய தமிழக முதல்வர்
உலகக் கோப்பைகளை வென்ற ஆஸி. மகளிர் கேப்டன் தற்காலிக ஓய்வு அறிவிப்பு
காமன்வெல்த் போட்டிகள்: இம்முறை தான் இந்திய அணி அதிகப் பதக்கங்களை வென்றதா?
நியூசி. ஒப்பந்தப் பட்டியலில் இருந்து டிரெண்ட் போல்ட் விடுவிப்பு
ஒலிம்பியாட்: இந்திய செஸ் அணிகளுக்கு ரூ. 2 கோடி பரிசு அறிவித்த தமிழக அரசு