செய்திகள்

இசை, வாண வேடிக்கைகளுடன் நிறைவு பெற்றது காமன்வெல்த் விளையாட்டு - புகைப்படங்கள்

DIN

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாணவேடிக்கையுடன் நிறைவு பெற்றது.

நிறைவு விழாவில் நடைபெற்ற வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய தேசிய கொடியை டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா சரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் ஏந்திச் சென்றனர்.

காமன்வெல்த்போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதில் போட்டிகள் நிறைவு பெற்றதாக, இளவரசர் எட்வார் அறிவித்தார்.

அடுத்த காமன்வெல்த் போட்டிகள் 2026ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் நடைபெறுகிறது. எனவே, அடுத்த காமன்வெல்த் விளையாட்டுக் கொடி நிறைவு விழாவில் விக்டோரியா ஆளுநரிடம் வழங்கப்பட்டது.

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களுடன் 4வது இடம் பிடித்து நிறைவு செய்தது.

ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் கனடா 92 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

மாயோள்..!

SCROLL FOR NEXT