சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி வீராங்கனை வைஷாலி தன்னுடைய கடைசி ஆட்டத்தை டிரா செய்துள்ளார்.
இந்திய ஏ மகளிர் அணி தனது கடைசி சுற்றில் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்திய ஏ அணியில் இடம்பிடித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி தனது கடைசி ஆட்டத்தில் அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் கிருஷ் ஐரினாவை எதிர்கொண்டார். 44-வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டத்தை டிரா செய்ய இருவரும் ஒப்புக்கொண்டார்கள்.
சென்னை செஸ் ஒலிம்பியாடில் விளையாடிய 11 ஆட்டங்களில் 5 வெற்றி, ஒரு தோல்வி, 5 டிரா என நன்றாக விளையாடி இந்திய ஏ அணியின் முக்கிய வீராங்கனையாக உள்ளார் வைஷாலி.
மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய முன்னாள் வீரர்
டி20 கிரிக்கெட்டில் முதல்முறையாக...: பொலார்ட் புதிய சாதனை
செஸ் ஒலிம்பியாட்: இந்திய பி அணி தங்கம் வெல்ல என்ன செய்ய வேண்டும்?
நிறைவடைந்தன காமன்வெல்த் போட்டிகள்: இந்திய அணி சாதித்தது என்ன?
இசை, வாண வேடிக்கைகளுடன் நிறைவு பெற்றது காமன்வெல்த் விளையாட்டு - புகைப்படங்கள்