செய்திகள்

சென்னை செஸ் ஒலிம்பியாட் கடைசி சுற்று: டிரா செய்த வைஷாலி

DIN


சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி வீராங்கனை வைஷாலி தன்னுடைய கடைசி ஆட்டத்தை டிரா செய்துள்ளார்.

இந்திய ஏ மகளிர் அணி தனது கடைசி சுற்றில் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்திய ஏ அணியில் இடம்பிடித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி தனது கடைசி ஆட்டத்தில் அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் கிருஷ் ஐரினாவை எதிர்கொண்டார். 44-வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டத்தை டிரா செய்ய இருவரும் ஒப்புக்கொண்டார்கள்.

சென்னை செஸ் ஒலிம்பியாடில் விளையாடிய 11 ஆட்டங்களில் 5 வெற்றி, ஒரு தோல்வி, 5 டிரா என நன்றாக விளையாடி இந்திய ஏ அணியின் முக்கிய வீராங்கனையாக உள்ளார் வைஷாலி.

மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT