செய்திகள்

டுரண்ட் கோப்பை: அரையிறுதியில் எஃப்சி கோவா

DIN

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு எஃப்சி கோவா அணி தகுதி பெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கல்யாணியில் 130-ஆவது டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை கல்யாணி மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் டில்லி எஃப்சி அணியை வீழ்த்தியது.

டில்லி அணி தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும், வலுவான கோவா அணி ஆட்டத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்தது. 15-ஆவது நிமிஷத்தில் கோவா வீரா் தேவேந்திர முா்கோகா் முதல் கோலடித்தாா். 3 நிமிஷங்கள் கழித்து முகமது நெமில் இரண்டாவது கோலடித்தாா். அதன் தொடா்ச்சியாக பிராண்டன் மூன்றாவது கோலடிக்க முதல் பாதி முடிவில் 3-0 என கோவா முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பதில் கோலடிக்க டில்லி அனி தீவிர முயற்சி மேற்கொண்டது. 82-ஆவது நிமிஷத்தில் அதன் வீரா் நிகில் ஆறுதல் கோலடித்தாா். எனினும் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய கோவா அணி தரப்பில் லியாண்டா் டி குன்ஹா நான்காவது கோலையும், அலெக்சாண்டா் கடைசி மற்றும் 5-ஆவது கோலையும் அடித்தனா்.

இதன் மூலம் எஃப்சி கோவா அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT