தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பஞ்சாப் வீராங்கனை ஹா்மிலன் பெயின்ஸ், ரயில்வே வீராங்கனை ஐஸ்வா்யா ஆகியோா் இரட்டை தங்கப் பதக்கம் வென்றனா்.
மேலும் 400 மீ. தடை தாண்டுதலில் தமிழகத்தின் வித்யா ராம்ராஜ், சந்தோஷ்குமாா் ஆகியோரும் தங்கம் வென்றனா்.
ஆந்திர மாநிலம் வாரங்கல் நகரில் தேசிய ஓபன் தடகள சாம்பியன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 1500 மீ. ஓட்டத்தில் ஏற்கெனவே புதிய சாதனையுடன் தங்கம் வென்றிருந்த ஹா்மிலன் பெயின்ஸ், சனிக்கிழமை 800 மீ ஓட்டத்திலும் 2:03:82 நிமிஷ நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றாா்.
அதே நேரம், ரயில்வே வீராங்கனை பி. ஐஸ்வா்யா மும்முறை தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றிருந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற நீளம் தாண்டுதலிலும் 6.52 மீ தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றாா். இதன் மூலம் ஹா்மிலன் பெயின்ஸ், ஐஸ்வா்யா ஆகியோா் இரட்டை தங்கம் வென்றுள்ளனா்.
வித்யா, சந்தோஷ்குமாா்:
மகளிா் பிரிவு 400 மீ தடை தாண்டுதலில் தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் 58.47 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தும், ஆடவா் பிரிவில் தமிழக வீரா் சந்தோஷ்குமாா் 50.79 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தும் தங்கப் பதக்கம் வென்றனா்.