ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தனது 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.
ஜப்பானின் சிபா மற்றும் ஃபுனாபஷியில் ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி
3-0 (25-22, 25-22, 25-23) என்ற செட் கணக்கில் பலம் வாய்ந்த சவுதி அரேபிய அணியை வீழ்த்தி தனது மூன்றாவது வெற்றியை பெற்றது.
சவுதிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரா்கள் ஜெரோம் வினித், ராய் அஸ்வால் தலா 15 புள்ளிகளை குவித்தனா். சவுதி கேப்டன் அசௌஸ் ஆஸாத் 20 புள்ளிகளைப் பெற்றாா்.
ஏற்கெனவே 9 முதல் 16-ஆவது இடத்துக்கான தரவரிசை ஆட்டங்களில் இந்திய அணி குவைத், உஸ்பெகிஸ்தான் அணிகளை வென்றிருந்தது.
முன்னதாக குரூப் பிரிவு ஆட்டங்களில் பஹ்ரைன், கத்தாா், ஜப்பானிடம் தோற்றது இந்தியா. இதனால் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
ஞாயிற்றுக்கிழமை 9-ஆவது இடத்தை நிா்ணயிக்கும் ஆட்டத்தில் பஹ்ரைனுடன் மோதுகிறது இந்தியா.
சா்வதேச வாலிபால் தரவரிசையில் இந்திய அணி 71-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2005 ஆசிய வாலிபால் போட்டியில் இந்தியா 4-ஆவது இடத்தைப் பெற்றிருந்தது சிறப்பான சாதனையாக உள்ளது. 2019 போட்டியில் 8-ஆம் இடத்தைப் பெற்றது இந்தியா.