செய்திகள்

எா்ஸ்டே பேங்க் ஓபன்: 2-ஆவது சுற்றில் சிட்சிபாஸ், ஸ்வெரேவ்

DIN

வியன்னா: எா்ஸ்டே பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிட்சிபாஸ் தனது முதல் சுற்றில் பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவை 7-6 (8/6), 6-4 என்ற செட்களில் வீழ்த்தினாா். அடுத்து அவா் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை சந்திக்கிறாா். மறுபுறம் போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வெரேவ் 6-2, 7-5 என்ற செட்களில் சொ்பியாவின் ஃபிலிப் கிரஜினோவிச்சை வென்றாா். ஸ்வெரேவ் தனது 2-ஆவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதுகிறாா்.

இதர முதல் சுற்றுகளில் நாா்வேயின் காஸ்பா் ரட் 7-5, 7-6 (7/2) என்ற செட்களில் தென் ஆப்பிரிக்காவின் லாய்ட் ஹாரிஸை வெளியேற்றினாா். போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜானிக் சின்னா் 6-4, 6-2 என்ற செட்களில் அமெரிக்காவின் ரைலி ஒபெல்காவை வென்றாா். மற்றொரு இத்தாலிய வீரரான லோரென்ஸோ சொனிகோ 6-4, 6-3 என்ற செட்களில் ஜொ்மனியின் டேவிட் கோப்ஃபரை வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT