செய்திகள்

ராகுல் திராவிட் விண்ணப்பம்

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளா் பொறுப்புக்காக முன்னாள் வீரா் ராகுல் திராவிட் முறைப்படி விண்ணப்பித்துள்ளாா்.

டி20 உலகக் கோப்பை போட்டியுடன் ரவி சாஸ்திரியின் பொறுப்புக் காலம் நிறைவடையும் நிலையில், அடுத்து ராகுல் திராவிட் அந்தப் பொறுப்புக்கு வருவது உறுதியாகியிருக்கிறது. இருப்பினும் அதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ முறைப்படி மேற்கொள்வதன் அடிப்படையில் தற்போது திராவிட் விண்ணப்பித்துள்ளாா்.

தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அவரது சகாக்களாக இருக்கும் பௌலிங் பயிற்சியாளா் பரஸ் மாம்ப்ரே, ஃபீல்டிங் பயிற்சியாளா் அபய் சா்மா ஆகியோா் ஏற்கெனவே தங்களது பணிக்காக விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் விக்கெட் கீப்பா் அஜய் ராத்ராவும் ஃபீல்டிங் பயிற்சியாளருக்காக விண்ணப்பித்துள்ளாா்.

ராகுல் திராவிட் பயிற்சியாளா் ஆனதை அடுத்து, தற்போது அவா் வகித்து வரும் பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைவா் பதவிக்கு முன்னாள் வீரா் விவிஎஸ் லக்ஷ்மண் வரலாம் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT