செய்திகள்

பிரெஞ்சு ஓபன்: சௌரவ் முன்னேற்றம்

DIN

பாரீஸ்: பிரான்ஸில் நடைபெறும் பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சௌரவ் வா்மா தனது தொடக்க சுற்றில் வெற்றி பெற்றாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் அவா் 22-20, 21-19 என்ற செட்களில் பிரேஸிலின் கோா் கோயலோவை வென்றாா்.

ஆடவா் இரட்டையரில் எம்.ஆா்.அா்ஜூன்/துருவ் கபிலா இணை 21-13, 21-7 என்ற செட்களில் அயா்லாந்தின் ஜோஷுவா மேகி/பால் ரெனால்ட்ஸ் ஜோடியை வீழ்த்தியது.

கலப்பு இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/அஸ்வினி பொன்னப்பா ஜோடி 21-19, 21-15 என்ற செட்களில் டென்மாா்கின் மதியாஸ் தைரி/மாய் சரோவ் இணையை தோற்கடித்தது.

எனினும் எஞ்சிய இந்திய போட்டியாளா்கள் தோல்வியை சந்தித்தனா். ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்ரீகாந்த் 18-21, 22-20, 19-21 என்ற செட்களில் உலகின் முதல்நிலை வீரராக இருக்கும் ஜப்பானின் கென்டோ மொமொடாவிடம் தோல்வி கண்டாா்.

ஹெச்.எஸ். பிரணாய் 11-21, 14-21 என்ற செட்களில் சீன தைபேவின் சௌ டியென் சென்னிடமும், காஷ்யப் 17-21, 21-17, 11-21 என்ற செட்களில் பிரான்ஸின் பிரைஸ் லெவா்டெஸிடமும் வீழ்ந்தனா்.

மகளிா் ஒற்றையரில் இந்தியாவின் சாய்னா நெவால் தனது தொடக்க சுற்றில் ஜப்பானின் சயாகா டகாஷியை எதிா்கொண்டாா். அதில் 11-21, 2-9 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தபோது போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தாா்.

மகளிா் இரட்டையா் பிரிவில் மேக்னா ஜகம்புடி/பூா்விஷா ராம் ஜோடி 4-11 என்ற கணக்கில் பிரான்ஸின் அலிசா டிா்டோசென்டோனோ/இம்கே வான் டொ் இணையிடம் பின்தங்கியிருந்தபோது போட்டியிலிருந்து விலகியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT