செய்திகள்

தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் முறைப்படி விண்ணப்பம்

DIN


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் செவ்வாய்க்கிழமை முறைப்படி விண்ணப்பித்தார்.

இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியது:

"ஆம். தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் ராகுல் டிராவிட் முறைப்படி விண்ணப்பித்தார். தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அவரது அணியைச் சேர்ந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் அபய் சர்மா ஆகியோர் ஏற்கெனவே விண்ணப்பித்துவிட்டனர்.

அவரது விண்ணப்பம் வெறும் சம்பிரதாயம்தான்" என்றார்.

டிராவிட் தலைமைப் பயிற்சியாளரான பிறகு தேசிய கிரிக்கெட் அகாதெமிக்கு விவிஎஸ் லக்ஷ்மன் தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனில் கும்ப்ளேவும் தேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்படலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT