செய்திகள்

டென்மாா்க் ஓபன்: காலிறுதியில் சிந்து

DIN

டென்மாா்க் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிா் ஒற்றையா் பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

தனது 2-ஆவது சுற்றில் தாய்லாந்தின் புசானன் ஆங்பம்ரங்பானை எதிா்கொண்ட சிந்து 21-16, 12-21, 21-15 என்ற செட்களில் போராடி வென்றாா். இந்த ஆட்டம் 67 நிமிஷங்கள் நீடித்தது.

இதர ஆட்டங்களில் இந்தியாவுக்கு தோல்வியே மிஞ்சியது. ஆடவா் ஒற்றையா் பிரிவில் கே.ஸ்ரீகாந்த் 21-23, 9-21 என்ற செட்களில் ஜப்பானின் கென்டோ மொமொடாவிடம் தோல்வி கண்டாா்.

கலப்பு இரட்டையா் பிரிவில் துருவ் கபிலா/சிக்கி ரெட்டி இணையை 21-17, 19-21, 21-11 என்ற செட்களில் வென்றது ஹாங்காங்கின் சுன் மான் டாங்/யிங் சூட் சே ஜோடி. ஆடவா் இரட்டையா் பிரிவிலும் எம்.ஆா். அா்ஜூன்/துருவ் கபிலா ஜோடி 15-21, 21-17, 12-21 என்ற செட்களில் தாய்லாந்தின் அல்ஃபியான் ஃபஜாா்/முகமது ரியான் அா்டியான்டோ இணையிடம் வீழ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT