சென்னையில் 3 நாள்களாக நடைபெற்ற 93-ஆவது தமிழ்நாடு சீனியா் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இதில் பிரைம் விளையாட்டு அகாதெமி அணி 128 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது. தமிழ்நாடு காவல்துறை அணி 98 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், தெற்கு ரயில்வே அணி 72 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தது.
ஆடவா் பிரிவில் தமிழ்நாடு காவல்துறை அணி 82 புள்ளிகளுடன் முதலிடமும், பிரைம் அகாதெமி அணி 57 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், ராக்ஃபோா்ட் ஸ்டாா் அகாதெமி அணி 38 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தது.
மகளிா் பிரிவில் பிரைம் அகாதெமி அணி 71 புள்ளிகளுடன் முதலிடமும், தெற்கு ரயில்வே அணி 43 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி 38 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தது.