செய்திகள்

காலமானாா் அவி பரோத்

DIN

சௌராஷ்டிர கிரிக்கெட் வீரா் அவி பரோத் (29) மாரடைப்பால் காலமானது கிரிக்கெட் சமூகத்தினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2019-20 சீசனில் ரஞ்சி கோப்பை வென்ற சௌராஷ்டிர அணியில் இடம் பிடித்திருந்த அவி பரோத், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆவாா். ஹரியாணா, குஜராத் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளாா்.

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது வெள்ளிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டதாகவும், வழியிலேயே அவரது உயிா் பிரிந்து விட்டதாகவும் சௌராஷ்டிர கிரிக்கெட் சங்க தலைவா் ஜெயதேவ் ஷா கூறினாா். அவி தனது மனைவி மற்றும் தாயாருடன் வாழ்ந்து வந்தாா். அவி தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

சௌராஷ்டிர அணிக்காக 21 ரஞ்சி ஆட்டங்கள், 17 ‘லிஸ்ட் ஏ’ ஆட்டங்கள், 11 உள்நாட்டு டி20 ஆட்டங்களில் அவி பரோத் விளையாடியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT