செய்திகள்

சீன தைபேவை வென்றது மகளிரணி

DIN

சா்வதேச நட்புரீதியிலான கால்பந்தாட்டத்தில் இந்திய மகளிரணி 1-0 என்ற கோல் கணக்கில் சீன தைபேவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கான கோலை ரேணு 3-ஆவது நிமிஷத்தில் அடித்தாா்.

ஃபிஃபா தரவரிசையில் 57-ஆவது இடத்திலிருக்கும் இந்தியா, 40-ஆவது இடத்திலிருக்கும் சீன தைபேவை வீழ்த்தி அசத்தியுள்ளது. இதையடுத்து தனது பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்து நாடு திரும்புகிறது இந்திய மகளிரணி.

முன்னதாக, தனது இந்தப் பயணத்தின்போது பஹ்ரைன் (5-0), ஐக்கிய அரபு அமீரகம் (4-1) ஆகிய அணிகளை வீழ்த்திய இந்தியா, டுனீசியாவிடம் மட்டும் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.

ஆசிய கோப்பை போட்டிக்காக தயாராகி வரும் இந்திய அணி, அடுத்த கட்டமாக ஸ்வீடனைச் சோ்ந்த இரு டிவிஷன் அணிகளுடன் வரும் 20 மற்றும் 23-ஆம் தேதிகளில் மோதவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT