உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் கலப்பு இரட்ரைடயர், மகளிர் இரட்ரைடயர் பிரிவில் களம் கண்டிருந்த இந்திய ஜோடிகள் காலிறுதியில் தோற்று வெளியேறின. இதையடுத்து இப்போட்டியில் இந்தியாவின் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.
கலப்பு இரட்டையர் பிரிவில் ஜி.சத்யன்/மனிகா பத்ரா இணை தனது காலிறுதியில் 5-11, 2-11, 11-7, 9-11 என்ற செட்களில் ஜப்பானின் ஹரிமோடோ டோமோ காஸூ/ஹயாடா ஹினா ஜோடியிடம் தோல்வியைத் தழுவியது.
மறுபுறம், மகளிர் இரட்ரைடயர் பிரிவு காலிறுதியில் மனிகா பத்ரா/அர்ச்சனா காமத் இணை 1-11, 6-11, 8-11 என்ற செட்களில் லக்ஸம்பர்க்கின் சாரா டி நூட்/ஜியா லியான்னி ஜோடியிடம் வீழ்ந்தது.
இப்போட்டியில் அரைரயிறுதிக்கு முன்னேறி அதில் தோல்வி காண்போருக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படுகிறது. அந்த வரைகயில் இந்த இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தால், உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் முறையாக பதக்கம் கிடைத்திருக்கும்.