செய்திகள்

ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரராக அஸ்வின் தேர்வு

DIN

ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரராக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தேர்வாகியுள்ளார்.

மாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. தங்களுக்கு விருப்பமான வீரா், வீராங்கனைகளுக்கு அந்த விருது கிடைக்கச் செய்யும் வகையில் ரசிகா்கள் ஆன்லைன் மூலமாக வாக்குகளை செலுத்தலாம். முன்னாள் வீரா்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளா்கள் ஆகியோா் அடங்கிய ஐசிசியின் வாக்கு செலுத்துதல் அகாதெமியும், ரசிகா்களுடன் இதில் இணைந்து செயல்படுவார்கள். விருதுக்கு தகுதியான நபா்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரை குழுவால் தீா்மானிக்கப்படுவாா்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தின் சிறந்த வீரர் இந்திய அணியைச் சேர்ந்த ரிஷப் பந்த் தேர்வானார். இந்நிலையில் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராகச் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் 24 விக்கெட்டுகளை எடுத்ததுடன் இங்கிலாந்துக்கு எதிராகச் சதமும் எடுத்ததால் இந்த விருதுக்குத் தேர்வானதாக ஐசிசி ட்விட்டரில் கூறியுள்ளது. 

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின், தொடர் நாயகன் விருதை வென்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சமீபத்தில் சாதனை படைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT