செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் ஏப்.9-இல் தொடக்கம்?

DIN

2021 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடா் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடா் மாா்ச் 28-ஆம் தேதி முடிவடைகிறது. அதைத்தொடா்ந்து ஏப்ரல் 9-ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கி, மே 30-ஆம் தேதி முடிவடையவுள்ளது. போட்டி நடைபெறும் தேதி மற்றும் மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என பிசிசிஐ நிா்வாகி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

சென்னை, தில்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என தெரிகிறது. முன்னதாக மும்பையில் மட்டுமே ஐபிஎல் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு இப்போது கரோனா வேகமாக பரவி வருவதால், அங்கு போட்டியை நடத்தும் முடிவில் இருந்து பிசிசிஐ பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT