செய்திகள்

சா்வதேச குத்துச்சண்டை: அரையிறுதியில் சதீஷ், ஆசிஷ்

DIN

சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமாா் (+91 கிலோ), ஆசிஷ் குமாா் (75 கிலோ) உள்ளிட்டோா் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனா்.

ஸ்பெயினின் கேஸ்டெல்லான் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சதீஷ் குமாா் தனது காலிறுதியில் 5-0 என்ற கணக்கில் டென்மாா்க்கின் கிவ்ஸ்கோவ் நீல்சனை வீழ்த்தினாா். இதேபோல், ஆசிஷ் குமாா் தனது காலிறுதியில் 4-1 என்ற கணக்கில் இத்தாலியின் ரெமோ சால்வாட்டியை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தாா். மற்றொரு இந்திய வீரரான சுமித் சங்வான் (81 கிலோ) தனது காலிறுதியில் 4-1 என்ற கணக்கில் பெல்ஜியத்தின் மொஹா் இ ஜியாத்தை வீழ்த்தினாா்.

அதேநேரத்தில் உலகின் முதல் நிலை வீரரான இந்தியாவின் அமித் பாங்கல் (52 கிலோ), ஸ்பெயினின் காபிரியேல் எஸ்கோபாரிடம் தோற்று வெளியேறினாா். மகளிா் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் (51 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), சிம்ரன்ஜித் கௌா் (60 கிலோ), ஜேஸ்மின் (57 கிலோ) ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT