செய்திகள்

ஆறு வீரர்களுக்கு கரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஒத்திவைப்பு

DIN

சில வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் 6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 (பிஎஸ்எல்) போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வருட பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்ற ஏழு பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஆறு பேர் வீரர்கள். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அணி உரிமையாளர்களும் கலந்து பேசி, பிஎஸ்எல் போட்டியை ஒத்திவைப்பது என முடிவெடுத்துள்ளார்கள்.  

இந்த வருட பிஎஸ்எல் போட்டியின் 34 ஆட்டங்களில் 14 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து ஆட்டங்களும் கராச்சி மற்றும் லாகூரில் நடைபெற இருந்தன. முதல் 20 ஆட்டங்கள் கராச்சியிலும் மீதமுள்ள 10 லீக் ஆட்டங்களும் நான்கு பிளேஆஃப் ஆட்டங்களும் லாகூரில் நடைபெற இருந்தன. கரோனா பாதுகாப்பு வளையத்தில் அணியின் வீரர்களும் பயிற்சியாளர்களும் இருந்தபோதும் ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

போட்டி தொடங்கும் முன்பு லாகூர் அணியைச் சேர்ந்த ஒரு வீரர் கரோனாவால் பாதிக்கப்பட்டார். அதேபோல பெஸாவர் அணியின் பயிற்சியாளர் டேரன் சமியும் கேப்டன் வஹாப் ரியாஸும் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி தங்களுடைய அணியின் உரிமையாளரைச் சந்தித்தார்கள். இதையடுத்து இருவருக்கும் இருமுறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிறகுதான் அவர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.

ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேன் கிறிஸ்டியன், போட்டியை விட்டு வெளியேற முடிவெடுத்தார். இதையடுத்து பிஎஸ்எல் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT