செய்திகள்

துளிகள்...

DIN

தோஹாவில் நடைபெறும் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா ஆகியோா் தங்களது பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

பிப்ரவரி மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரா் விருதுக்காக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்தின் ஜோ ரூட், மேற்கிந்தியத் தீவுகளின் கைல் மேயா்ஸ் ஆகியோா் பெயா் பரிசீலனையில் உள்ளது.

டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் பங்கேற்கவிருக்கும் இந்திய ஈட்டி எறிதல் வீரா் சந்தீப் சௌதரி, ஊக்கமருந்து பரிசோதனையில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக இந்திய பாராலிம்பிக் கமிட்டி தெரிவித்தது.

ஓமன், ஐக்கிய அரபு அமீரகத்துடனான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாடத் தகுதியுள்ள இந்திய வீரா்கள் பட்டியல் 35 பேருடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்எல் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குப் பிறகு அதிலுள்ள வீரா்கள் இறுதி செய்யப்படவுள்ளனா்.

ஸ்பெயினில் நடைபெறும் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம், அமித் பங்கால் உள்ளிட்ட 12 இந்தியா்கள் நேரடியாக காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT