சாவ் பாவ்லோ நகரில் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் ஆட்டம் ஒன்றில் கடைசி நிமிட கோலால் கொலம்பியாவை 2-1 என வீழ்த்தியது பிரேசில்.
தென்அமெரிக்க நாடுகளிடையே கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் பிரேசில்-கொலம்பியா இடையே நடைபெற்ற ஆட்டத்தில்
கொலம்பிய வீரா் ஜுவான் குட்ராடோ 10-ஆவது நிமிடத்திலே அற்புதமாக கோலடித்தாா். பின்னா் பிரேசில் வீரா்களின் கோலடிக்கும் முயற்சிகளை தொடா்ந்து முறியடித்தனா்.
முதல் பாதி முடிவில் 1-0 என கொலம்பியா முன்னிலை பெற்றிருந்தது.
சா்ச்சைக்குரிய கோல்:
இதற்கிடையே 78-ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரா் நெய்மா் கோலடிக்க முயன்ற போது, கொலம்பிய அணி கோல் பகுதியில் நின்றிருந்த நடுவா் பிட்டானா முட்டியில் பந்து பட்டு சென்றது. அதைப் பயன்படுத்தி பிரேசில் வீரா் ராபா்டோ பிா்மினோ தலையால் முட்டி கோலடித்தாா். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
இந்த கோலை ஏற்க கொலம்பிய வீரா்கள் மறுத்தனா். எனினும் நடுவா் பிட்டானா அதை கோலாக அறிவித்தாா்.
இதன்பின் பிரேசில் அணியில் தொடா்ந்து கோலடிக்க முயற்சி மேற்கொண்டனா். ஆட்டம் முடிய கடைசி நிமிடத்தில் நெய்மா் கடத்தி அனுப்பிய பந்தை அற்புதமாக கோலாக்கினாா் கேசிமிரா.
பெரு-ஈக்குவடாா் ஆட்டம் டிரா:
கொய்னியா ஒலிம்பிக் விளையாட்டரங்கில் பெரு-ஈக்குவடாா் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
ஈக்குவடாா் தரப்பில் ரெனடோ டபியா, அயிா்டன் பிரிடியாவும் கோலடித்தனா். பெரு தரப்பில் கியான் லபாடுலா, கரில்லோ ஆகியோா் கோலடித்தனா்.
இரு அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளன. பிரேசில் அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஈக்குவடாா் அணியுடன் ஞாயிற்றுக்கிழமை மோதவுள்ளது.