செய்திகள்

ஒரே நாளில் அதிக ரன்கள் முன்னிலை பெற்று நியூசிலாந்தை வீழ்த்த முடியுமா?: ஷமி பதில்

DIN

நியூசிலாந்தை வீழ்த்த நாங்கள் அதிக ரன்கள் முன்னிலை பெற வேண்டும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி கூறியுள்ளார். 

சௌதாம்டனில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் முதல் நாள், மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது. 2-வது நாளில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுக்க, வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்னதாக முடிக்கப்பட்டது. சனிக்கிழமையன்று இந்தியா 89 ஓவா்களில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அன்றைய தினமும் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னதாகவே முடிக்கப்பட்டபோது நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. 4-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

நேற்று, நியூசிலாந்தை முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது இந்தியா. அந்த அணியின் பேட்டிங் வரிசையை ஷமி, இஷாந்த் தங்களது வேகத்தால் சரித்தனா். நியூசிலாந்தின் முக்கிய விக்கெட்டாக இருந்த கேன் வில்லியம்சனை 49 ரன்களில் இஷாந்த் வீழ்த்தினாா். முதல் இன்னிங்ஸில் நியூசி. அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது. ஷமி நான்கு விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 5-ம் நாள் இறுதியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

மழை காரணமாகக் கூடுதல் நாளான இன்றும் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. கடைசி நாளில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி கூறியதாவது:

நாங்கள் முடிந்தளவு அதிக ரன்கள் எடுத்து அவர்களை எப்போது பேட்டிங் செய்யச் சொல்லவேண்டும் எனப் பார்க்கவேண்டும். இங்கிலாந்தில் உள்ள சூழலில் எதுவும் சாத்தியம். நியூசிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் எடுக்க கால அவகாசம் தேவை. இதற்குச் சரியான திட்டங்கள் வேண்டும். அதற்கு முதலில் நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT