உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் விளையாடவுள்ள 11 வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ சுட்டுரையில் வெளியிட்டுள்ளது.
சுழற்பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்களாக இஷாந்த் சர்மா, ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி ஆகியோர் விளையாடுகின்றனர்.
முகமது சிராஜ் களமிறக்கப்படலாம் என்ற பேச்சுகள் இருந்து வந்த நிலையில் அவர் சேர்க்கப்படவில்லை. விக்கெட் கீப்பிங்கில் எதிர்பார்த்ததுபோல் ரித்திமான் சஹாவுக்குப் பதில் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். ஹனுமா விஹாரி சேர்க்கப்படவில்லை.
இந்திய அணி:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், சேத்தேஷ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாஸ்பிரீத் பூம்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி.