இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்தது. ஆனால், இந்திய வீரர் கிருனால் பாண்டியாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆட்டம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. பாண்டியாவுடன் தொடர்பிலிருந்ததன் காரணமாக இந்திய வீரர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இரண்டாவது டி20 ஆட்டம் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷனாகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் 4 அறிமுக வீரர்கள் களமிறங்குகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸின் ருதுராஜ் கெய்க்வாட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.