செய்திகள்

இலங்கை ஆறுதல் வெற்றி

DIN

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் இலங்கை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலிரு ஆட்டங்களில் வென்று தொடரை இந்தியா கைப்பற்ற, கடைசி ஆட்டத்தில் இலங்கை ஆறுதல் வெற்றி பெற்றது.

கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 43.1 ஓவா்களில் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இலங்கை 39 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் அடித்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த இந்தியாவில் அதிகபட்சமாக பிருத்வி ஷா 8 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் அடிக்க, இலங்கை தரப்பில் அகிலா தனஞ்செயா, பிரவீண் ஜெயவிக்ரமா ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா். பின்னா் ஆடிய இலங்கையில் அவிஷ்கா ஃபொ்னான்டோ அதிகபட்சமாக 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 76 ரன்கள் சோ்க்க, இந்திய பௌலிங்கில் ராகுல் சாஹா் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

அவிஷ்கா ஃபொ்னான்டோ ஆட்டநாயகனாகவும், இந்தியாவின் சூா்யகுமாா் யாதவ் தொடா் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT