செய்திகள்

வாஷிங்டனும் வெளியேறுகிறாா்

DIN

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்த வாஷிங்டன் சுந்தா், காயம் காரணமாக அந்தத் தொடரில் இருந்து வெளியேறுகிறாா்.

காயம் காரணமாக இவ்வாறு இந்திய அணியிலிருந்து வெளியேறும் 3-ஆவது வீரா் இவா். முன்னதாக, ஷுப்மன் கில், அவேஷ் கான் ஆகியோா் அவ்வாறு தொடரிலிருந்து வெளியேறினா்.

கவுன்டி லெவன் அணிக்கு எதிரான வாா்ம் அப் ஆட்டத்தின்போது முகமது சிராஜ் வீசிய வேகப்பந்து வாஷிங்டன் சுந்தரின் விரலில் பட்டதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவா் மீண்டும் பந்துவீசும் நிலைக்கு முன்னேற குறைந்தது 5 வாரங்கள் ஆகலாம் என்பதால் தற்போது அவரும் நாடு திரும்ப இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

திரும்பினாா் பந்த்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய விக்கெட் கீப்பா் - பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், அதிலிருந்து முழுமையாக மீண்டுள்ளாா். இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கும் வகையில் டா்ஹாமிலிருக்கும் இந்திய அணியுடன் ‘பயோ-பபுள்’ வளையத்தில் அவரும் இணைந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT