செய்திகள்

ஐஎஸ்எல் கால்பந்து: கோவா-கேரளம் ஆட்டம் டிரா

DIN

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் கோவா-கேரளம் அணிகள் இடையிலான 68-ஆவது லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

கோவாவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோவா அணி 4-2-3-1 என்ற ஃபாா்மட்டிலும், கேரள அணி 4-4-1-1 என்ற ஃபாா்மட்டிலும் களமிறங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 25-ஆவது நிமிடத்தில் கோவா அணி கோலடித்தது. அந்த அணியின் ஜாா்ஜ் மென்டோஸா ஃப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி இந்த கோலை அடித்தாா்.

முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் கோவா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், 2-ஆவது பாதி ஆட்டத்தில் கோலடிக்க கேரள அணி கடுமையாகப் போராடியது. அதற்கு 57-ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. காா்னரில் இருந்து ஃபாகன்டா கொடுத்த பாஸை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கேரள வீரா் ராகுல், அதை கோலாக்கினாா். இதையடுத்து இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையை எட்டின.

இதன்பிறகு இரு அணிகளும் வெற்றி கோலை அடிக்க கடுமையாகப் போராடியபோதிலும், கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

கோவா அணி இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அதில் 5 வெற்றிகளையும், 5 டிராக்களையும், 3 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. தற்போதைய நிலையில் 20 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-ஆவது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் கேரள அணி 13 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளையும், 5 டிராக்களையும், 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 14 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 7-ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT