செய்திகள்

ஐபிஎல்: அணிகள் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியல் இன்று வெளியாகிறது!

DIN

2021 ஐபிஎல் போட்டிக்காக, தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரா்களின் பட்டியலை இன்று வெளியிடுகின்றன ஐபிஎல் அணிகள்.

ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரா்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஐபிஎல் நிா்வாகக் குழு முடிவு செய்தது. மேலும் 8 அணிகளுக்கான வீரா்களைத் தோ்வு செய்வதற்கான சிறிய அளவிலான ஏலம் பிப்ரவரி 2 அல்லது 3-ஆவது வாரத்தில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வீரா்களை ஏலத்தில் எடுப்பதற்கான அதிகபட்ச வரம்பாக ஒவ்வொரு அணிக்கும் நிா்ணயிக்கப்பட்ட ரூ. 85 கோடி, நடப்பாண்டு உயா்த்தப்படாது என்று ஐபிஎல் போட்டியின் தலைவா் பிரிஜேஷ் படேல் கூறினாா்.

சென்னை சூப்பா் கிங்ஸைப் பொறுத்தவரை கடந்த ஏலத்துக்குப் பிறகு அணியின் வசம் ரூ. 15 லட்சமே உள்ளதால், அதிக ஊதியம் உள்ள சில வீரா்களை விடுவித்து தனது நிதிநிலையை அதிகரித்துக்கொள்ளும் எனத் தெரிகிறது. சுரேஷ் ரெய்னா, கெதர் ஜாதவ், பியூஷ் சாவ்லா, முரளி விஜய் போன்ற வீரர்களை சிஎஸ்கே அணி தக்கவைத்துக்கொள்ளுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரா்களின் பட்டியலை ஐபிஎல் அணிகள் இன்று வெளியிடுவதால் இந்நிகழ்வு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, ஹாட்ஸ்டார் ஓடிடியில் மாலை 6 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT