செய்திகள்

பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் விளையாடத் தயார்: முகமது அமிர் திடீர் அறிவிப்பு

DIN

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் டிசம்பர் 15 அன்று திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சூழல் மாறினால் மீண்டும் விளையாடத் தயாராக இருப்பதாக அவர் தற்போது கூறியுள்ளார். 

கடந்த 2010-ல் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது அப்போதைய கேப்டன் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது அமிர் ஆகியோர் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு தடை விதித்தது ஐசிசி. இவர்களில் முகமது அமிர் 5 ஆண்டு தண்டனைக் காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து 2016-ல் அணிக்குத் திரும்பினார்.

முகமது அமிர் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் சிக்கியபோது அவருக்கு வயது 18. அவர் அப்போது 14 டெஸ்ட், 15 ஒரு நாள் போட்டி, 18 டி20 போட்டிகளில் விளையாடியிருந்தார். பிறகு 2016-ல், இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். 27 வயதில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதன் மூலம் என்னால் வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் அதிகக் கவனம் செலுத்தமுடியும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்குகிற சமயத்தில் பாகிஸ்தான் தேர்வுக்குழு நன்குத் திட்டமிடுவதற்காக என்னுடைய ஓய்வைத் தற்போது அறிவித்துள்ளேன் என்றார். 

எனினும் கடந்த மாதம், தற்போதைய நிர்வாகத்தின் தலைமையில் தன்னால் விளையாட முடியாது என அமிர் அறிக்கை வெளியிட்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 28 வயது அமிர், பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்டுகள், 61 ஒருநாள், 50 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

ஓய்வு அறிவிப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள விடியோவில் அமிர் கூறியதாவது:

உண்மையாக, இந்த நிர்வாகத்தின் தலைமையில் என்னால் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட முடியாது. நான் கிரிக்கெட்டை விட்டு தற்போது விலகுகிறேன். என்னைக் கொடுமைப்படுத்தியுள்ளார்கள். என்னால் இதை எதிர்கொள்ள முடியவில்லை. 2010-15 வரை எல்லாம் பார்த்துவிட்டேன். 

எல்லோரும் நாட்டுக்காக விளையாட ஆசைப்படுவார்கள். உலகம் முழுக்க உள்ள டி20 லீக்குகளில் விளையாடுவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். பிபிஎல் போட்டியில் விளையாடி, மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பினேன். லீக்குகளில் விளையாட எனக்கு ஆர்வம் என்றால் பாகிஸ்தானுக்கு விளையாட விருப்பம் இல்லை என்று கூறியிருப்பேன். ஒவ்வொரு மாதமும் யாராவது ஒருவர் அமிர், நம்மைப் புறக்கணித்து விட்டார் எனக் கூறுகிறார்கள் என்றார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அமிர் ஓய்வு பெற்றதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்தது. 

இந்நிலையில் ட்விட்டரில் முகமது அமிர் கூறியதாவது:

தற்போதைய நிர்வாகம் பதவியை விட்டு விலகினால் பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் விளையாடத் தயாராக உள்ளேன். எனவே தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT