பிரிஸ்பேன் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி நாளில் இந்திய அணி இலக்கை அடைய 324 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 4-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில், ரோஹித் சர்மா 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற 324 ரன்கள் தேவை, ஆஸ்திரேலிய அணிக்கு 10 விக்கெட்டுகள் தேவை. 5-ம் நாளில் மழை அனுமதித்தால் நமக்கு அட்டகாசமான தருணங்கள் காத்திருக்கின்றன.