செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி நாளை (ஜன.19) தேர்வு

DIN


இங்கிலாந்துடனான 4 டெஸ்ட் ஆட்டங்களில் முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கான இந்திய அணியை மட்டும் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்வு செய்கிறது.

ஆஸ்திரேலியாவுடனான தொடருக்குப் பிறகு இந்திய அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 

இதில், முதலிரண்டு ஆட்டங்கள் சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக சேத்தன் சர்மா தலைமையிலான தலைமை தேர்வுக் குழு செவ்வாய்க்கிழமை கூடுகிறது.

இதனால், காயம் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில்/ஆட்டத்திலிருந்து விலகியுள்ள இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜாஸ்பிரீத் பூம்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், ஹனுமா விஹாரி உள்ளிட்டோர் மீது கவனம் அதிகரித்துள்ளது. சையது முஷ்டக் அலி தொடரில் உத்தரப் பிரதேச அணிக்காக புவனேஷ்வர் குமாரும் சிறப்பாக விளையாடி வருகிறார். கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பவுள்ளார். 

முன்னணி வீரர்கள் அணிக்குத் திரும்பினால், ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் உள்ளிட்டோர் மீண்டும் அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்களா என்ற கேள்வியும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:

முதல் டெஸ்ட்: பிப்ரவரி 5-9, சென்னை
2-வது டெஸ்ட்: பிப்ரவரி 13-17, சென்னை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT